செய்திகள்

அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி கணவன்-மனைவி படுகாயம்

Published On 2018-01-23 09:53 GMT   |   Update On 2018-01-23 09:53 GMT
அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி கணவன் மற்றும் மனைவி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மாபேட்டை:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், அவளிவநல்லூர் கிராமம், அண்ணாநகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 48). இவர் தனது மனைவி இளமதி (வயது 43) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தார்.

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை அருகே உடையார்கோவில் என்ற இடத்தில் சென்றபோது உடையார்கோவில், கீழகோவில் பத்து கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்த ராதாகிருஷ்ணன் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மனோகரன் மற்றும் இளமதி ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News