செய்திகள்

மண்ணச்சநல்லூர் அருகே மணல் கடத்தல் : 2 பேர் கைது

Published On 2018-01-21 14:57 GMT   |   Update On 2018-01-21 14:57 GMT
மண்ணச்சநல்லூர் அருகே அரசு அனுமதியில்லாமல் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மண்ணச்சநல்லூர்:

மண்ணச்சநல்லூர் பூனாம் பாளையத்தில் மணல் கடத்தப்படுவதாக தாலுகா அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதனையடுத்து தாசில்தார் மகாலெட்சுமியின் உத்தரவின்பேரில் பூனாம் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சோமசுந்தரம், கிராம உதவியாளர் ஆகியோர் சென்று பார்த்த போது அங்கு சீதாலெட்சுமி நகரில் ஒரு டிராக்டரில் ஆற்று மணல் இருந்ததை கண்டனர். அந்த மணல் திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து அரசு அனுமதியில்லாமல் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து மண்ணச்ச நல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் மற்றும் போலீசார் சீதாலெட்சுமி நகர் சென்று டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஓட்டுனர் திருவானைக்கோவில் வெள்ளி திருமுத்தம் திருப்பதி(24), தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மணலுடன் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.  #tamilnews
Tags:    

Similar News