செய்திகள்
வடசேரியில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
வடசேரியில் நடந்து சென்ற தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராஜ் என்ற துரை (வயது 23). இவர் நேற்று ஒழுகினசேரி பகுதியில் வேலை முடிந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த செல்வகுமார் என்ற சாமுவேல் கத்தியை காட்டி மிரட்டி துரையிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வடசேரி போலீசில் ஸ்ரீராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுனில் குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேதமாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். #tamilnews