பொங்கல் திருநாளில் ரூ.219 கோடிக்கு மது விற்பனை
சென்னை:
பண்டிகை காலங்களில் மது குடித்து கொண்டாடும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
புனிதமான விழாக்களாக இருந்தாலும் சரி, பாரம்பரிய விழாக்களாக இருந்தாலும் சரி. அதில் மதுவை முக்கியமாக்கி வருவது அந்த விழாக்களின் முக்கியத்துவத்தையே சிதைப்பதாகத்தான் பார்க்கப்படுகிறது.
ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்று முக்கிய விழாக்களில் மது விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது. ஆண்டுதோறும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் திருநாளில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. பொங்கல் தினத்தில் ரூ.127 கோடியும், போகி தினத்தன்று ரூ.92 கோடியும் விற்பனையாகி இருக்கிறது.
விற்பனையான மது பாட்டில்கள் எண்ணிக்கையில் பார்த்தால் கடந்த ஆண்டை விட 0.3 சதவீதம் குறைவு தான். ஆனால் வருமானம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் மது வகைகள் விலை உயர்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு ரூ.204 கோடிக்குதான் மது விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு ரூ.15 கோடி அதிகமாக விற்றுள்ளது. இதில் பீர் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 1000 மதுக்கடைகளை மூடியது, நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடியது ஆகியவற்றால் எதிர்பார்த்ததை விட மது விற்பனை குறைந்து விட்டதாம்.
வடசென்னையில் 35 மதுக்கடைகள் மூடப்பட்டதால் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தது. #tamilnews