search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac sold"

    2017-18-ம் ஆண்டு நிதி ஆண்டில் மொத்தம் 31 ஆயிரத்து 757 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் தமிழ்நாட்டில் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் தமிழக அரசுக்கு நிகர லாபமாக ரூ. 26 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது.

    இதற்காக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1983-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

    மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப் போவதாக கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. அறிவித்தது. அதன்படி சுமார் ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டன.

    என்றாலும் டாஸ்மாக் மூலம் வரும் மது விற்பனை வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படிதான் உள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான மது விற்பனை மூலம் கூடுதல் வருமானம் கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    2017-18-ம் ஆண்டு நிதி ஆண்டில் மொத்தம் 31 ஆயிரத்து 757 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் தமிழ்நாட்டில் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் தமிழக அரசுக்கு நிகர லாபமாக ரூ. 26 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    டாஸ்மாக் நிறுவனம் 11 மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று விற்பனை செய்கிறது. #Tasmac
    ×