செய்திகள்
வாலாஜா அருகே லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
வாலாஜா அருகே லாரி மீது பைக் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வேலூர் அடுத்த ஊசூர் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் செலவராஜ். இவரது மகன் சந்துரு (வயது19) இவர் நேற்று காலை சொந்த வேலையாக வாலாஜாவிற்கு பைக்கில் சென்றார்.
வேலையை முடித்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். வாலாஜா அருகே வன்னி வேடு தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கம் பைக் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சந்துருவை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.