search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலாஜா"

    வாலாஜா அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் எம்.பி.டி. ரோட்டை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 24). பெயிண்டர் வேலை செய்து வந்தார். நேற்று மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது பெற்றோருடன் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலாஜா போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த கிருஷ்ணாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ். இவரது மனைவி பத்மாவதி (வயது 65).

    இவருடைய கணவர் எத்திராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    வாலாஜா அரசு பெண்கள் கல்லூரி பின்புறம் உள்ள அம்மனந்தாங்கல் ஏரிக்கு 100 நாள் வேலைக்காக சென்றார்.

    அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து மேட்டுரூக்கு சென்ற தனியார் பஸ் பத்மாவதி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பத்மாவதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பத்மாவதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே சைக்கிள் மீது பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா லோகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 61). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வேலையை முடித்து விட்டு வாலாஜாவில் இருந்து வீட்டிற்கு சைக்களில் சென்று கொண்டிருந்தார்.

    கீழ்புதுப்பாளையம் என்ற இடத்தில் சைக்கிள் சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் கன்னியப்பன் பலத்தகாயமடைந்தார்.

    அவரை மீட்ட பொதுமக்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்த்திரியில் அனுமதித்தனர்.அங்கு கன்னியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    பொன்னை எம்.எஸ். கண்டிகை ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 38). இவரது மனைவி சரளா (36). இவர்கள் 2 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் கொரட்டூரில் உள்ள உறவினர்கள் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று மாலை அங்கிருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். லாலாபேட்டை நெல்லிக்குப்பம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் ஈஸ்வரன் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சரஸ்வதி பலத்த காயமடைந்தார்.

    தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, படுகாயமடைந்த சரஸ்வதியை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே பணத் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யபட்டார்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள ஒழுகூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (வயது 25). கூலி தொழிலாளி. இவரது நண்பர் சுமைதாங்கி பகுதியை சேர்ந்த மற்றொரு சரவணன் (30).

    இவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தலங்கை பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பினர். அப்போது சுமைதாங்கி சரவணன் ரூ.5 ஆயிரம் வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த பணத்தை காணவில்லை என்று கூறி ஒழுகூர்சரவணன் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் உன் பணத்தை எடுக்க வில்லை நீ தான் மது போதையில் வேறு ஒருவருக்கு பணத்தை கொடுத்து விட்டாய் என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து அவரை அடையாளம் காட்டு என்று கூறி பைக்கில் இருவரும் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் ஒழுகூர் சரவணன் பைக்கை நிறுத்தும்படி கூறி பைக்கில் இருந்து இறங்கி ஓடினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரை பிடித்து எதற்காக ஓடுகிறாய் அப்படியென்றால் நீ தான் பணத்தை எடுத்தாயா என்று கேட்டு அவரை சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த ஒழுகூர் சரவணன் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து சுமைதாங்கி சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயமடைந்த ஒழுகூர் சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஒழுகூர் சரவணன் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே குட்டையில் முழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாணியம்பாடி வடக்குபட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் அருண்குமார் (18). இவர் கடந்த ஒரு வருடமாக வாலாஜா சீனிவாசன் பேட்டையில் உள்ள அவரது பெரியம்மா வீட்டில் தங்கி ராணிப்பேட்டை தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அருண்குமார் நேற்று தனது நண்பர்கள் 6 பேருடன் பூண்டி பாலாற்றில் உள்ள குட்டையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது அருண்குமார் மட்டும் குட்டையில் இறங்கி குளித்தார். சிறிது நேரத்தில் அருண்குமார் குட்டை நீரில் மூழ்கி தத்தளித்தார்.

    இதனை கண்ட அவரது நண்பர்கள் நீண்ட நேரமாக போராடி அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி கம்பெனியில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
    வாலாஜா:

    வாலாஜா அடுத்த வன்னிவேடு மோட்டூர் ஆற்காடு தெற்கு தெருவில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி கம்பெனி கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    இதில் ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஊதுபத்தி கம்பெனி திறக்கப்பட்டு மாலை வழக்கம் போல் பணிகள் முடிந்து மூடிவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ஊதுபத்தி கம்பெனியின் ஏ பிளாக் பிரிவில் திடீரென தீபிடித்தது. பற்றி எரிந்த தீ அறை முழுவதும் பரவியது. கம்பெனியில் இருந்து கரும்புகை வெளியில் வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். அதற்குள் ஊதுபத்தி கம்பெனி முழுவதும் தீ வேகமாக பரவியது. ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை போராடி அணைத்தனர். தீயால் பாதிப்படைந்த ஊதுபத்தி கம்பெனி சுவர் இடிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தயார் செய்யப்பட்ட நிலையில் இருந்த ஊதுபத்தி மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து விடியற்காலையில் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். #Tamilnews
    ஆந்திராவுக்கு வேனில் கடத்தப்பட்ட 10 டன் ரேசன் அரிசி வாலாஜா அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
    வாலாஜா:

    வாலாஜா தாசில்தார் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர் சவுந்தரராஜன் ஆகியோர் சென்னை-பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள வாணிசத்திரத்தில் இன்று காலை மணல் கடத்தலை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, வேலூர் மார்க்கமாக வந்த வேனை மடக்கி சோதனையிட்டனர். வேனில் 50 கிலோ எடையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 10 டன் எடையுள்ள 200 ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது. அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது, டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    ரேசன் அரிசி கடத்தி வந்த வேன், ஆந்திர பதிவெண் கொண்டது. எனவே, 10 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, 10 டன் ரேசன் அரிசியுடன் வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    10 டன் ரேசன் அரிசி மூட்டைகளிலும் அரசின் முத்திரை சீல் உள்ளது. எனவே, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை கிடங்கில் இருந்து அப்படியே கடத்தி வந்துள்ளனர். இதற்கு உணவுப் பொருள் வழங்கல் அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல், இவ்வளவு டன் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்த முடியாது. தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி, ஆந்திராவுக்கு ரெயில்கள், பஸ்கள் மூலம் கடத்தி செல்வது அதிகரித்து வருகிறது என்று அதிகாரிகளே குற்றம் சாட்டினர்.

    சமீபத்தில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில், சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 26) என்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தாலும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.

    குறிப்பாக, ஆந்திராவுக்கு கடத்தபடும் ரேசன் அரிசி, அங்கு பாலிஷ் போட்டு புதுரக அரிசியாக தமிழக சந்தைக்கே கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தலில் அதிகாரிகள் முதல் ஆந்திர கும்பல் வரை சங்கிலி தொடர் போல் இணைந்து செயல்படுகின் றனர்.

    எனவே, ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



    ×