search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா அருகே சைக்கிள் மீது பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பலி
    X

    வாலாஜா அருகே சைக்கிள் மீது பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பலி

    வாலாஜா அருகே சைக்கிள் மீது பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா லோகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 61). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வேலையை முடித்து விட்டு வாலாஜாவில் இருந்து வீட்டிற்கு சைக்களில் சென்று கொண்டிருந்தார்.

    கீழ்புதுப்பாளையம் என்ற இடத்தில் சைக்கிள் சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் கன்னியப்பன் பலத்தகாயமடைந்தார்.

    அவரை மீட்ட பொதுமக்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்த்திரியில் அனுமதித்தனர்.அங்கு கன்னியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×