search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "walaja"

    வாலாஜா அருகே பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த கிருஷ்ணாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ். இவரது மனைவி பத்மாவதி (வயது 65).

    இவருடைய கணவர் எத்திராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    வாலாஜா அரசு பெண்கள் கல்லூரி பின்புறம் உள்ள அம்மனந்தாங்கல் ஏரிக்கு 100 நாள் வேலைக்காக சென்றார்.

    அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து மேட்டுரூக்கு சென்ற தனியார் பஸ் பத்மாவதி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பத்மாவதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பத்மாவதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே சைக்கிள் மீது பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா லோகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 61). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வேலையை முடித்து விட்டு வாலாஜாவில் இருந்து வீட்டிற்கு சைக்களில் சென்று கொண்டிருந்தார்.

    கீழ்புதுப்பாளையம் என்ற இடத்தில் சைக்கிள் சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் கன்னியப்பன் பலத்தகாயமடைந்தார்.

    அவரை மீட்ட பொதுமக்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்த்திரியில் அனுமதித்தனர்.அங்கு கன்னியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×