search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maistry death"

    வேலூர் அருகே பைக் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த சந்தனகொட்டா கொளமேட்டை சேர்ந்தவர் ரேணு (வயது 58). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாலை மேல்வெங்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரேணு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே சைக்கிள் மீது பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா லோகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 61). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வேலையை முடித்து விட்டு வாலாஜாவில் இருந்து வீட்டிற்கு சைக்களில் சென்று கொண்டிருந்தார்.

    கீழ்புதுப்பாளையம் என்ற இடத்தில் சைக்கிள் சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் கன்னியப்பன் பலத்தகாயமடைந்தார்.

    அவரை மீட்ட பொதுமக்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்த்திரியில் அனுமதித்தனர்.அங்கு கன்னியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் பாகாயத்தில் இன்று காலை லாரி மோதி மேஸ்திரி உடல் நசுங்கி இறந்தார்.

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த வாசு மகன் சுபாஷ்(36) மேஸ்திரி. இன்று காலை மோட்டார் சைக்கிளில் பாகாயம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மீது மோதியது. இதில் லாரியின் பின் டயருக்குள் சிக்கினார். அவர் மீது லாரி டயர் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சுபாஷ் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    பாகாயம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின் றனர். இந்த விபத்தால் பாகாயத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×