search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "walajah"

    வாலாஜா அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    பொன்னை எம்.எஸ். கண்டிகை ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 38). இவரது மனைவி சரளா (36). இவர்கள் 2 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் கொரட்டூரில் உள்ள உறவினர்கள் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று மாலை அங்கிருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். லாலாபேட்டை நெல்லிக்குப்பம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் ஈஸ்வரன் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சரஸ்வதி பலத்த காயமடைந்தார்.

    தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, படுகாயமடைந்த சரஸ்வதியை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே பணத் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யபட்டார்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள ஒழுகூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (வயது 25). கூலி தொழிலாளி. இவரது நண்பர் சுமைதாங்கி பகுதியை சேர்ந்த மற்றொரு சரவணன் (30).

    இவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தலங்கை பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பினர். அப்போது சுமைதாங்கி சரவணன் ரூ.5 ஆயிரம் வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த பணத்தை காணவில்லை என்று கூறி ஒழுகூர்சரவணன் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் உன் பணத்தை எடுக்க வில்லை நீ தான் மது போதையில் வேறு ஒருவருக்கு பணத்தை கொடுத்து விட்டாய் என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து அவரை அடையாளம் காட்டு என்று கூறி பைக்கில் இருவரும் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் ஒழுகூர் சரவணன் பைக்கை நிறுத்தும்படி கூறி பைக்கில் இருந்து இறங்கி ஓடினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரை பிடித்து எதற்காக ஓடுகிறாய் அப்படியென்றால் நீ தான் பணத்தை எடுத்தாயா என்று கேட்டு அவரை சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த ஒழுகூர் சரவணன் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து சுமைதாங்கி சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயமடைந்த ஒழுகூர் சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஒழுகூர் சரவணன் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே குட்டையில் முழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாணியம்பாடி வடக்குபட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் அருண்குமார் (18). இவர் கடந்த ஒரு வருடமாக வாலாஜா சீனிவாசன் பேட்டையில் உள்ள அவரது பெரியம்மா வீட்டில் தங்கி ராணிப்பேட்டை தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அருண்குமார் நேற்று தனது நண்பர்கள் 6 பேருடன் பூண்டி பாலாற்றில் உள்ள குட்டையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது அருண்குமார் மட்டும் குட்டையில் இறங்கி குளித்தார். சிறிது நேரத்தில் அருண்குமார் குட்டை நீரில் மூழ்கி தத்தளித்தார்.

    இதனை கண்ட அவரது நண்பர்கள் நீண்ட நேரமாக போராடி அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×