செய்திகள்

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி

Published On 2017-12-27 13:47 GMT   |   Update On 2017-12-27 13:47 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சை வல்லம் அருகே உள்ள ராவுச்சாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 50). கொத்தனார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக நடுக்காவேரி பகுதியில் உள்ள தங்கை எஸ்தர் மேரி வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார்.

பின்னர் மாலையில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கள்ளப்பெரம்பூர் - ஆலக்குடி சாலையில் ராஜா வாய்க்கால் அருகே அவர் வந்த போது நிலை தடுமாறி அங்கிருந்த வயல் வரப்பில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வல்லம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தோணிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News