செய்திகள்

மதுரையில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

Published On 2017-12-20 10:39 GMT   |   Update On 2017-12-20 10:39 GMT
மதுரையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை திருப்பாலை எம்.எம். நகரைச் சேர்ந்தவர் சண்முகப்பெருமாள். இவரது மனைவி சண்முக லட்சுமி (வயது 53). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

புதுநத்தம் ரோட்டில் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்தனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் சண்முகலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை நகரில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இதை தடுக்க போலீசார் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
Tags:    

Similar News