search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women jewelry theft"

    ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சென்னை திருவேல்லிகேனி பகுதியை சேர்ந்தவர் முகமது சாகிர் பாஷா(42). இவரது மனைவி காதர்பீவி(40). கணவன்-மனைவி இருவரும் சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக சுவேதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தனர்.

    நள்ளிரவில் காதர்பீவி ஜன்னல் ஓரமாக தூங்கி கொண்டிருந்தார். ரெயில் ஈரோடு ஜங்‌ஷன் அருகே வந்தபோது, மர்மநபர் ஒருவர் வெளியே நின்று கொண்டு காதர்பீவி கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்றான்.

    இதில் உஷார் ஆன அவர், செயினை இருக்கமாக பிடித்து கொண்டதால் பாதி செயினை மட்டும் அறுந்து மர்மநபரிடம் சிக்கியது. இதில் 4 பவுன் செயினில், 2 பவுன் மட்டுமே தப்பியது.

    இதுகுறித்து முகமது சாகீர் பாஷா இமெயில் மூலம் நேற்று ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.
    திருவாரூரில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருநெய்பேர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெயசுதா (வயது40). வேளாண் விற்பனை மையத்தில் பணியாற்றி வருகிறார்.

    கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை திருவாரூர் வடக்குவீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு திரும்பினர். அப்போது புதுத்தெரு பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் திடீரென ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் ஜெயசுதா அணிந்திருந்த 4½ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    ஜெயசுதா இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வாகன சோதனையில் விளமல் பகுதியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 2 பேரை விரட்டி சென்று தண்டலை பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் 2 பேரையும் திருவாரூர் நகர போலீசில் ஒப்படைத்தனர். இருவரும் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. செயின் பறிப்பு சம்பவத்தில் காயமடைந்த ஜெயசுதா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    ×