search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvarur theft"

    திருவாரூரில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருநெய்பேர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெயசுதா (வயது40). வேளாண் விற்பனை மையத்தில் பணியாற்றி வருகிறார்.

    கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை திருவாரூர் வடக்குவீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு திரும்பினர். அப்போது புதுத்தெரு பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் திடீரென ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் ஜெயசுதா அணிந்திருந்த 4½ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    ஜெயசுதா இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வாகன சோதனையில் விளமல் பகுதியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 2 பேரை விரட்டி சென்று தண்டலை பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் 2 பேரையும் திருவாரூர் நகர போலீசில் ஒப்படைத்தனர். இருவரும் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. செயின் பறிப்பு சம்பவத்தில் காயமடைந்த ஜெயசுதா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    திருவாரூர் மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சி குளிக்கரை சேகர் என்பவர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விக்ரமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் திருடர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தர்மபுரியில் ஒரு திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த பிரம்மமூர்த்தி (27), நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்த வினோத்குமார் (வயது 25) ஆகிய இருவரும் விசாரணையின்போது குளிக்கரை சேகர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனடிப்படையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் கொரடாச்சேரி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் குளிக்கரை சேகர் வீட்டில் திருடிய கார் மற்றும் நகைகளையும், திருவாரூர் ஒன்றியம் கீழப்படுகையில் சத்துணவு அமைப்பாளர் வீட்டில் திருடிய 8 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பாத்திரங்களையும் இருவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டு பொருட்களை மீட்ட திருவாரூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப் -இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், கொரடாச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் தைமை காவலர் ரவிக்குமார் ஆகியோரை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டன்ட் விக்ரமன் பாராட்டினார்.

    ×