search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
    X

    திருவாரூர் மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

    திருவாரூர் மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சி குளிக்கரை சேகர் என்பவர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விக்ரமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் திருடர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தர்மபுரியில் ஒரு திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த பிரம்மமூர்த்தி (27), நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்த வினோத்குமார் (வயது 25) ஆகிய இருவரும் விசாரணையின்போது குளிக்கரை சேகர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனடிப்படையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் கொரடாச்சேரி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் குளிக்கரை சேகர் வீட்டில் திருடிய கார் மற்றும் நகைகளையும், திருவாரூர் ஒன்றியம் கீழப்படுகையில் சத்துணவு அமைப்பாளர் வீட்டில் திருடிய 8 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பாத்திரங்களையும் இருவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டு பொருட்களை மீட்ட திருவாரூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப் -இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், கொரடாச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் தைமை காவலர் ரவிக்குமார் ஆகியோரை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டன்ட் விக்ரமன் பாராட்டினார்.

    Next Story
    ×