செய்திகள்

கரூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது

Published On 2017-12-19 11:37 GMT   |   Update On 2017-12-19 11:37 GMT
கரூர் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலாயுதபாளையம்:

கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (33), கூலிதொழிலாளி. இவர் கரூர் -பரமத்திவேலூர் செல்லும் நெடுஞ்சாலை ரோட்டின் குறுக்கே நின்றுகொண்டு அந்த வழியாக வருபவர்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்த குமரவேலை கைது செய்தனர்.
Tags:    

Similar News