செய்திகள்

மேலூர் அருகே முதியவர் தற்கொலை

Published On 2017-12-17 11:33 GMT   |   Update On 2017-12-17 11:33 GMT
மேலூர் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மேலூர் அடுத்த இ.மலம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிசாமி (வயது 50). இவரது மனைவி சிட்டு. ஆண்டிசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் ஆண்டிசாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆண்டிசாமி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக கீழவளவு போலீசில் சிட்டு புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News