செய்திகள்

புன்னம் சத்திரம் அருகே மது விற்றவர் கைது

Published On 2017-12-14 14:48 GMT   |   Update On 2017-12-14 14:48 GMT
புன்னம் சத்திரம் அருகே மசக்கவுண்டன்புதூர் செல்லும் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே மசக்கவுண்டன்புதூர் செல்லும் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். 

அதன்  பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த குறுக்கு பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார்  (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News