செய்திகள்

திண்டுக்கல் அருகே வேன்- கார் மோதல்: அய்யப்ப பக்தர்கள் 6 பேர் நசுங்கினர்

Published On 2017-12-12 10:03 GMT   |   Update On 2017-12-12 10:03 GMT
திண்டுக்கல் அருகே கார் வேன் மோதிக்கொண்ட விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 6 பேர் உடல் நசுங்கினர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கன்னிவாடி:

சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒரு காரில் சபரி மலை சென்றனர். சாமிதரிசனம் செய்த அவர்கள் பழனி கோவிலுக்கு வந்தனர். காரை டிரைவர் சதீஷ் ஓட்டினார். காரில் டிரைவர் உள்பட 7 பேர் வந்தனர்.

இந்த கார் திண்டுக்கல் அருகே கோவிந்தாபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பால்வேன் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 6 பேர் உடல் நசுங்கினர். அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் விசாரிக்கிறார்கள்.
Tags:    

Similar News