திருக்கனூர் அருகே கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே சோரப்பட்டு காலனி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது45), கூலித்தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை.
சம்பவத்தன்று வெங்கட்ராமனுக்கு நோய் கொடுமை அதினமானது. இதனால் மனமுடைந்த வெங்கட்ராமன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்டவ் அடுப்பில் இருக்கும் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீபரவியதால் வெங்கட்ராமன் வலியால் அலறி துடித்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு தீயை அணைத்து வெங்கட்ராமனை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கட்ராமன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வெங்கட்ராமனுக்கு பவானி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.