செய்திகள்
மதுரையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை விரகனூர் நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் திருப்பதி (வயது20). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்த திருப்பதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின்பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.