செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி தீயணைப்பு வீரர் பலி
ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி தீயணைப்பு வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
பெரியபாளையத்தை அடுத்த அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). தீயணைப்பு வீரர். ஊத்துக்கோட்டை அருகே உள்ள தேர்வாய் கண்டிகை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை ரமேஷ் மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டார்.
சூளைமேனி அருகே வந்த போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.
பலியான ரமேசுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. விபத்தில் அவர் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.