செய்திகள்

சேலம் அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2017-11-21 15:17 GMT   |   Update On 2017-11-21 15:18 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கருமாபுரத்தானூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி அருக்காணி (வயது60) இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டபடி பேசிக் கொண்டு இருந்தார்.

திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவிய அந்த வாலிபர் அருக்காணி கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றார். அப்போது அருக்காணி செயினை இருக பிடித்துக் கொண்டு அலறினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதனை கவனித்த திருடன் கையில் சிக்கிய அரை பவுன் தாலியுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பொதுமக்களும் விடாமல் விரட்டி சென்றனர். அப்போது அருகில் இருந்த சோளக்காட்டுக்குள் பதுங்கிய அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் தரதரவென இழுத்து சென்றனர். இதற்கிடையே சங்கிகரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சங்ககிரி அருகே உள்ள வரதன்காட்டானூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் வேல்முருகன் (வயது30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் இதேபோல் வேறு வழிபறி சம்பவத்திலும் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News