செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதல்: கல்லூரி மாணவர் பலி

Published On 2017-11-21 11:44 GMT   |   Update On 2017-11-21 11:44 GMT
கோவையில் மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

கோவை:

கோவை வரதராஜ புரத்தை சேர்ந்தவர் சார்லஸ் பென்னி ஆபிரகாம் (17). இவர் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் உப்பிலிப்பாளையத்தை சேர்ந்த கோகுல். இவரும் ஒரு கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று மாலை இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி சாலையில் இருந்து ரேஸ்கோர்ஸ் பிரிவு சாலைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சார்லஸ் பென்னி ஆபிரகாம் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோகுல் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய லோடு ஆட்டோ டிரைவர் முத்துப்பாண்டியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News