செய்திகள்

பாபநாசம் அருகே கோவில் ஊழியருக்கு மிரட்டல்: வாலிபர் கைது

Published On 2017-11-21 11:29 GMT   |   Update On 2017-11-21 11:29 GMT
பாபநாசம் அருகே கோவில் ஊழியருக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே உள்ள சாலபோகம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகுபாண்டி (வயது 46). இவர் பாபநாசம் சீனிவாச பெருமாள் கோவிலில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியில் வசித்து வரும் விக்னேஷ் என்பவர் கோவில் அனுமதியில்லாமல் வீட்டின் மேற்கூரை பகுதியில் சிமெண்ட் கலவை பூசியுள்ளார். அதனை முருகுபாண்டி தட்டி கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த விக்னேஷ், முருகுபாண்டியை வேலை செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து முருகுபாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேதநாயகி வழக்கு பதிவு செய்து விக்னேசை கைது செய்தார்.

Tags:    

Similar News