செய்திகள்

கோயம்பேடு பஸ்நிலையத்தில் பெண்ணிடம் 12 பவுன் நகை கொள்ளை

Published On 2017-11-21 09:48 GMT   |   Update On 2017-11-21 09:48 GMT
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 12 பவுன் நகை மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

கே.கே.நகர் அருகே எம். ஜி.ஆர். நகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பாரதி. இவர் இன்று காலை உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவாசி செல்ல கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

இரண்டாவது பிளாட் பாரத்தில் வந்தவாசி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார் பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்றபோது தன் கைப்பை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 12பவுன் நகை மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது. மர்ம நபர்கள் கொள்ளை அடித்தது தெரிய வந்தது. இதுகுறித்து பஸ் நிலையம் போலீசில் பாரதி புகார் அளித்தார்.
Tags:    

Similar News