செய்திகள்

மதுரை: நான்கு வழிச்சாலையில் 5 ஆயிரம் விவசாயிகள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Published On 2017-11-20 07:37 GMT   |   Update On 2017-11-20 07:37 GMT
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மேலூர் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி சென்னை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சுமார் 5 ஆயிரம் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை:

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக மேலூர் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். அரசு நடவடிக்கை எடுக்காததால், இன்று சென்னை - கன்னியாகுமரி சாலையில் மினி கோயில் பகுதியில் சுமார் 5 ஆயிரம் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களுக்கு தண்ணீர் திறப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.டி.வி தினகரன் மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களும் சாலை மறியலில் பங்கெடுத்துள்ளனர். இதனால், நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News