செய்திகள்
நாட்டறம்பள்ளியில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்டறம்பள்ளியில் பதுக்கி வைக்கிப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி சோம நாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டிருப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடிக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை சிறு, சிறு மூட்டைகளாக முட்புதரில் பதுக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.