செய்திகள்
மன்னார்குடி அருகே புரோகிதர் மனைவி தீக்குளித்து தற்கொலை
மன்னார்குடி அருகே புரோகிதர் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேசம் பகுதியை சேர்ந்தவர் விசுவநாத அய்யர். புரோகிதர். இவரது மனைவி லட்சுமி (வயது 66). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் புரோகிதர் பணிக்காக விசுவநாத அய்யர் வெளியூருக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் குளியலறையில் லட்சுமி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி மன்னார்குடி போலீசுக்கு புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விரைந்து சென்று லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
லட்சுமி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கவனிக்க உறவினர்கள் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தையும் இல்லாததால் வேதனையில் இருந்து வந்தார். இதன் காரணமாக மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் லட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான வேறெதும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேசம் பகுதியை சேர்ந்தவர் விசுவநாத அய்யர். புரோகிதர். இவரது மனைவி லட்சுமி (வயது 66). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் புரோகிதர் பணிக்காக விசுவநாத அய்யர் வெளியூருக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் குளியலறையில் லட்சுமி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி மன்னார்குடி போலீசுக்கு புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விரைந்து சென்று லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
லட்சுமி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கவனிக்க உறவினர்கள் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தையும் இல்லாததால் வேதனையில் இருந்து வந்தார். இதன் காரணமாக மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் லட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான வேறெதும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.