செய்திகள்
நத்தம் அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
நத்தம் அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நத்தம்:
நத்தம் அருகே பூதகுடியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி பெயர் சுகப்பிரியா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்களாகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக சுகப்பிரியா விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்களே ஆனதால் மதுரை ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.