செய்திகள்
மதுரையில் 2 பெண்களிடம் மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை காமராஜர்புரம் வ.உ.சி.தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி மாரிச்செல்வி (வயது 32). இவர் நேற்று காலை கேட்லாக் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
ரெயில்வே கேட் அருகே சென்றபோது அவரை வழிமறித்த 2 பேர், கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர் தனது 3¼ நகை, ரூ.7 ஆயிரத்தை பையில் வைத்துக் கொண்டு தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகைக்கடைக்கு சென்றார். அப்போது மர்ம நபர் பையை நைசாக திருடிக் கொண்டு தப்பினார்.
இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.