செய்திகள்
மீஞ்சூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி
மீஞ்சூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 17) ஏ.சி மெக்கானிக். கடந்த 2 வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
அத்திப்பட்டு புதுநகர் முழுவதும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் தொற்று நோய் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள குற்றம்சாட்டி உள்ளனர்.