செய்திகள்
மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மாதவரத்தை சேர்ந்த இளம்பெண் பலியானார்.
மாதவரம்:
மாதவரம், கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாலமன். இவரது மகள் ஷர்மிளா (வயது23). பட்டப்படிப்பு முடித்து உள்ளார்.
ஷர்மிளாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. மாதவரம் பால் பண்ணை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து ஷர்மிளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
மாதவரம், கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாலமன். இவரது மகள் ஷர்மிளா (வயது23). பட்டப்படிப்பு முடித்து உள்ளார்.
ஷர்மிளாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. மாதவரம் பால் பண்ணை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து ஷர்மிளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.