செய்திகள்

சேந்தமங்கலம் அருகே 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை

Published On 2017-10-23 11:08 GMT   |   Update On 2017-10-23 11:08 GMT
சேந்தமங்கலம் அருகே 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த செல்லியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். லாரி டிரைவர் இவரது மனைவி பவிதா (வயது 30) இவர்களுக்கு ஹேமந்த் (9), தீவந்த் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

நாமக்கல்லில் குடியிருந்த பரிதாவால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இதனால் சொந்த ஊருக்கு வந்து விடுமாறு கூறிவிட்டு கணவர் லாரி வேலைக்கு சென்றுவிட்டார். மாமனார் வீட்டில் வசிக்க விருப்பம் இல்லாத பவிதா நாமக்கல்லில் இருந்து ஊருக்கு வரும்போது குளிர்பான பாட்டிலையும், வி‌ஷத்தையும் வாங்கி விட்டு ஊருக்கு வந்தார்.

பின்னர் செல்லியாயி பாளையத்தில் தனது 2 குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் வி‌ஷத்தை கலந்து கொடுத்து விட்டு அதை தானும் குடித்தார். 3 பேரும் மயங்கி விழுந்தனர். அவர்களை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று 11.30 மணிக்கு பவிதா இறந்து போனார். 2 குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News