செய்திகள்

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவி தவறி விழுந்து பலி

Published On 2017-10-23 08:13 GMT   |   Update On 2017-10-23 08:13 GMT
பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவி தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள கொல்லன்வலசை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் வசந்தி (வயது 18). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கயம் முள்ளிபுரத்தில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு செல்வதற்காக பழனி நோக்கி சென்ற அரசு பஸ்சில் கொமரபாளையத்தில் இருந்து ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வசந்தி முன்பக்க படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார்.

பஸ் முள்ளிபுரம் வளைவில் திரும்பிய போது நிலை தடுமாறி வசந்தி பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வசந்திக்கு டாக்டர்கள் திவீர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வசந்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News