செய்திகள்

ஊத்துக்கோட்டையில் கோவிலில் திருடிய 2 பேர் கைது

Published On 2017-10-22 10:30 GMT   |   Update On 2017-10-22 10:30 GMT
ஊத்துக்கோட்டையில் கோவில் உண்டியல் பணம் மற்றும் நகையை கொள்ளயடித்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் நகை கொள்ளை போனது, இதேபோல் பென்னாலூர் பேட்டை கிராமத்தில் உள்ள முருகன் கோவில், செங்கரை கிராமத்தில் உள்ள காட்டு செல்லி அம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று விட்டனர். கொள்ளையர்களை பிடிக்க ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவில்களில் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த கிரண்குமார், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பத்தை சேர்ந்த தமிழரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கம், 3 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News