செய்திகள்

சாய்பாபா காலனியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் தங்கம், வைர நகைகள் திருட்டு

Published On 2017-10-21 10:50 GMT   |   Update On 2017-10-21 10:50 GMT
கோவை சாய்பாபா காலனியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் தங்கம், வைர நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் ரோட்டை சேர்ந்தவர் ஜான்கென்னடி (51). தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஜான் கென்னடி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த தங்க, வைர நககைள் உள்பட 4 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ஜான்கென்னடி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News