செய்திகள்

தர்காவில் உண்டியலை உடைத்து கொள்ளை: 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

Published On 2017-10-16 12:54 GMT   |   Update On 2017-10-16 12:54 GMT
சேலத்தில் தர்காவில் உண்டியலை உடைத்து ரூ.9 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடிசென்றனர். மேலும் 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தையும் திருடிச் சென்றனர்.

சேலம்:

சேலம் பொன்னம்மா பேட்டை திப்பு நகரில் தர்கா ஒன்று உள்ளது. இந்த தர்காவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.9ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலிசார் விசாரித்து வருகிறார்கள்.

சேலம் கன்னங்குறிச்சி மகேந்திரபுரி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (60).இவர் தொரிலாளா நல அலுவலகத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டு கதவை உடைத்து ஒரு பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்னொரு பீரோவில் இருந்த 35பவுன் நகையை விட்டு சென்று உள்ளனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வசித்து வந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த ஒன்றரை லட்சம் ரொக்கப்பணம், அரை கிலோ வெள்ளி பொருட்கள், 16 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News