செய்திகள்

ராமநாதபுரம் அருகே கோவில் உண்டியல் கொள்ளை

Published On 2017-10-11 11:06 GMT   |   Update On 2017-10-11 11:06 GMT
ராமநாதபுரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகேயுள்ள சம்பையில் பிரசித்தி பெற்ற ஓம் சக்தி கோவில் உள்ளது. வழக்கம் போல் பூஜை முடித்து அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டுச் சென்றார்.

இந்த நிலையில் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்தனர்.

பின்னர் அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். உண்டியலில் ரூ. 52 ஆயிரம் வரை இருந்ததாக தெரிகிறது.

கோவிலில் நடந்த உண்டியல் கொள்ளை குறித்து நிர்வாகி நாகேஸ்வரி தேவிபட்டிணம் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News