செய்திகள்
மாணவர்கள், தூய்மை தூதுவர்களாக மாற வேண்டும்: விருதுநகர் கலெக்டர் பேச்சு
மாணவர்கள் தூய்மை தூதுவர்களாக மாற வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகர்:
சுத்தமான, சுகாதாரமான புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசால் தூய்மை சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் என்ற நோக்கத்தில் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியில் பேரணி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சிவஞானம் தொடக்கி வைத்தார். இந்த பேரணியில் சவுடாம்பிகா பொறியியல் கல்லூரியை சேர்ந்த நாட்டுநலப்பணிதிட்ட மாணவர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து பந்தல்குடி பெண்கள் கல்லூரியில் தூய்மையே சேவை இயக்க உறுதி மொழியை கலெக்டர் சிவஞானம் தலைமையில் 600 மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து பேசிய அவர், மற்றவர்களை குறை கூறாமல் ஒவ்வொருவரும் தூய்மையின் அவசியத்தை உணர்ந்து செயல்படும்போது அது சமுதாயத்திற்கும், சுற்றுப்புற சூழலுக்கும் பல நன்மைகளை பெற்றுத்தரும். மாணவ- மாணவிகள் தூய்மையின் மகத்துவத்தை உணர்ந்து, தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு தூய்மை தூதுவர்களாக செயல் படவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்வி, வட்டாட்சியர் ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மல்லிகா, மாரியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சுத்தமான, சுகாதாரமான புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசால் தூய்மை சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் என்ற நோக்கத்தில் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியில் பேரணி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சிவஞானம் தொடக்கி வைத்தார். இந்த பேரணியில் சவுடாம்பிகா பொறியியல் கல்லூரியை சேர்ந்த நாட்டுநலப்பணிதிட்ட மாணவர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து பந்தல்குடி பெண்கள் கல்லூரியில் தூய்மையே சேவை இயக்க உறுதி மொழியை கலெக்டர் சிவஞானம் தலைமையில் 600 மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து பேசிய அவர், மற்றவர்களை குறை கூறாமல் ஒவ்வொருவரும் தூய்மையின் அவசியத்தை உணர்ந்து செயல்படும்போது அது சமுதாயத்திற்கும், சுற்றுப்புற சூழலுக்கும் பல நன்மைகளை பெற்றுத்தரும். மாணவ- மாணவிகள் தூய்மையின் மகத்துவத்தை உணர்ந்து, தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு தூய்மை தூதுவர்களாக செயல் படவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்வி, வட்டாட்சியர் ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மல்லிகா, மாரியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.