செய்திகள்

ஆம்பூரில் மிளகாய் பொடி தூவி தொழிலாளி கொலை

Published On 2017-09-25 12:17 GMT   |   Update On 2017-09-25 12:17 GMT
ஆம்பூரில் மிளகாய் பொடி தூவி தொழிலாளியை கொலை செய்து தண்டவாளத்தில் உடலை வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர்:

ஆம்பூர் ரபீக்நகர் ரெயில்வே தண்டவாளம் அருகே இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இறந்து கிடந்தவர் யார் என்பது தெரியவில்லை ஜட்டி மற்றும் நீலநிற சட்டை அணிந்திருந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. மேலும் உடல் முழுவதும் மிளகாய் பொடி பூசியுள்ளனர். இதன் மூலம் அவர் கொலை செய்யபட்டிருப்பது உறுதியாகியுள்ளது. மர்ம கும்பல் அவரை மிளாகாய் பொடி தூவி கொலை செய்து தண்டவாளம் அருகே உடலை வீசி சென்றுள்ளனர்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான நபர் யார் அவரை கொன்று வீசி சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News