செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: என்.ஆர்.தனபாலன்

Published On 2017-09-25 09:45 GMT   |   Update On 2017-09-25 09:45 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரை சந்தித்ததாக கூறிய அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர்கள், கவர்னர், மத்திய மந்திரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் உள்பட அனைவரையும் தனித் தனியாக விசாரித்து உண்மை நிலவரங்களை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை மத்திய- மாநில அரசுகளுக்கு உள்ளது. ஆதலால் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News