search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.ஐ. விசாரணை"

    • சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது.
    • வரும் ஜூலை 30 ந் தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் இந்து முன்னணி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மாநில செயலாளர் தாமு வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாள ர்களிடம் கூறியதாவது :- தி.மு.க. இந்து விரோத கட்சியாக செயல்படுகிறது. இந்து கோயில்களை இடிக்க முயல்கிறது. புண்ணிய தலமாக அவிநாசி விளங்குகிறது. அங்குள்ள சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது. யாரோ பீடி பிடித்து வீசி தான் தீவிபத்து நிகழ்ந்தது என்றனர். அதன் பின்னர் 2000ம் ஆண்டில் தற்கொலை நடைபெற்ற போது அங்கு ஒரு பைபிள் கிடந்தது. அவர் மனநோயாளி என்று சொல்லி முடித்து விட்டனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று ள்ளது. இதனையும் பைத்தியக்காரன் என்று சொல்லி முடிக்கின்றனர். தொடர்ந்து அவிநாசி கோயிலில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் ஜூலை 30 ந்தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது. பட்டினபிரவேசம் என்பது பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வைபவம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. மதம் சார்ந்த நம்பிக்கைகளில் மதசார்பின்மை கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் தலையிடுவது கூடாது. இந்து மதத்திற்கு என்று பல நூற்றாண்டு வழிபாட்டு மரபு , நடைமுறைகள் உள்ளன. இந்து கோயில்களில் அரசியல்வாதிகள் தலையீடு கூடாது.

    கடவுள் பக்தி நம்பிக்கையுடையவர்களை தான் கோயில்களுக்கும் செயல்அலுவல ர்களாகவும், அறங்காவலர்க ளாகவும் நியமனம் செய்ய வேண்டும். இந்து கோயில் வருமானம் அனைத்தும் இந்து கோயில்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர்கள் லோகநாதன், சர்வேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சிவக்குமார்,விஜயகுமார், ராகுல் பாலாஜி, உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
    • வழக்கில் தொடர்புடைய வங்கி மேலாளர், உள்ளிட்ட 4 பேரை சிபிஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

    பல்லடம்:

    பல்லடத்தைச் சேர்ந்த சிவகுமார் அவரது அண்ணன் விஜயகுமார், விஜயகுமார் மகன் ராகுல் பாலாஜி,மற்றும் தமிழரசன், பிரவினா ஆகியோர் கூட்டாக சேர்ந்து திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடம் சொத்துப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாக சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், பிரவீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழரசன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    சிவக்குமார்,விஜயகுமார், ராகுல் பாலாஜி, உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக புகார் தாரர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-ரூ.100 கோடி மோசடி குறித்து பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க பல்லடம் போலீசார் தாமதப்படுத்தியதால், இந்த வழக்கை சிபிஐ.க்கு மாற்றக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்து வந்தோம்.இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ. க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய வங்கி மேலாளர், உள்ளிட்ட 4 பேரை சிபிஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×