செய்திகள்

மீஞ்சூர் அருகே கோவிலில் கொள்ளை: போலீசார் விசாரணை

Published On 2017-09-25 07:52 GMT   |   Update On 2017-09-25 07:52 GMT
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பூஜை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மீஞ்சூர்:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு, ராஜாஜி நகரில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்து கோவிலை பூசாரி பூட்டி சென்றார்.

இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அம்மன் சிலையில் இருந்த ½பவுன் நகை மற்றும் அங்கிருந்த பூஜை பொருட்களை மூட்டை கட்டி மர்ம நபர்கள் அள்ளிச் சென்றிருப்பது தெரிந்தது.

இதே கோவிலில் ஏற்கனவே 2 முறை கொள்ளை நடந்துள்ளது. தற்போது 3-வது முறையாக கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் சாலையில் வசித்து வருபவர் ஆசியா பேகம். இவர் வீட்டை பூட்டி விட்டு மணலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், 1½ பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News