search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிலில் கொள்ளை"

    • பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் பழங்கால ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது.
    • ஸ்ரீதேவி, பூதேவி, மூலவரான பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திகள் என மொத்தம் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடி க்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் காவலாளியை கொலை செய்து கோயில் உட்பிரகாரத்தில் இருந்த நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. அந்தச் சம்பவம் ஆனது அச்சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தற்போது தாரமங்கலம் சாவடி தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் பழங்கால ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி, மூலவரான பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திகள் என மொத்தம் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடி க்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து நேற்று வழக்கம்போல காலையில் கோயிலில் பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்டு குழம்பிப் போன பூசாரி கோயில் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோயில் உள்ளே இருந்த 8 ஐம்பொன் சாமி சிலைகள் மாயமானது தெரியவந்தது.

    அதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து அதன் பின்னர் தாரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா, காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் தலைமையில் காவல்துறை யினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டு மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் தாரமங்கலம் பகுதியில் பழங்கால 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதற்கட்ட விசாரணையாக அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கொள்ளை யர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொள்ளையர் குறித்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

    • உண்டியலை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் மலையில் மயிலாடும்பாறை முருகன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் பூஜைகள் நடக்கிறது. விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி கிருத்திகை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தினர்.

    நேற்று இரவு பூஜை முடிந்து பூட்டி சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர்.பூட்டை உடைத்து அங்கிருந்த சாமி அலங்கார பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளிச் சென்று விட்டனர்.

    ஆடி கிருத்திகை முடிந்த நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக இன்று காலை கோவில் நிர்வாகிகள் சென்றனர். அப்போது கோவிலில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மயிலாடும்பாறை முருகன் கோவிலில் பணம் பொருட்கள் கொள்ளை போனது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×