செய்திகள்

திருமங்கலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவர் மரணம்

Published On 2017-09-20 12:12 GMT   |   Update On 2017-09-20 12:12 GMT
திருமங்கலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை:

திருமங்கலம் அருகேயுள்ள மறவன்குளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜபாண்டி (வயது 17). திருமங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு ராஜபாண்டி காய்ச்சலால் அவதிப்பட்டார். உடனடியாக அவரை திருமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காய்ச்சல் குறைய வில்லை. இதனால் ராஜபாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News