செய்திகள்

கரூர் அருகே வாலிபர் எரித்துக்கொலை?

Published On 2017-09-19 14:26 GMT   |   Update On 2017-09-19 14:26 GMT
கரூர் அருகே உடல் கருகி கிடந்த வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அரவக்குறிச்சி:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஐந்து ரோடு தேசிய நெடுஞ்சாலையோரம் இன்று காலை வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தீயில் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை.

மர்ம நபர்கள் யாராவது அவரை அடித்துக்கொன்று தீ வைத்து எரித்து விட்டு சென்றிருக்கலாமா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News