செய்திகள்

சேலம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை

Published On 2017-09-11 10:38 GMT   |   Update On 2017-09-11 10:38 GMT
சேலம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த வெடிக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்றிரவு 7 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டு கதவின் பூட்டும், பீரோ பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த 36 பவுன் நகை, 55ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் கொளத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

Tags:    

Similar News