செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: அரசு உத்தரவு

Published On 2017-08-28 23:25 GMT   |   Update On 2017-08-28 23:25 GMT
தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னை:

தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1.டி.கல்பனா நாயக்- ஐ.ஜி.யான இவர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். இவர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. மகேந்திர குமார் ரத்தோடு- டி.ஐ.ஜியான இவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. அருண் பாலகோபாலன்- நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று மதுரை நகர போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

4. என்.ஸ்டீபன் ஜேசுபாதம்- விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசேஷ புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

5. பி.தங்கத்துரை- கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப் பட்டுள்ளார்.

6. ஆர்.ராமகிருஷ்ணன்- சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றிய இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

7. எம்.துரை- இவர் கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றினார். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

8. ஜி.தர்மராஜன்- கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர் கோவை நகர தலைமையக துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. ஜெ.மகேஷ்- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர் மதுரை நகர தலைமையக துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

10. ஏ.மயில்வாகணன்- மதுரை நகர தலைமையக துணை கமிஷனராக பணியாற்றிய இவர் திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News